14.6.13

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சித்திறன் நேர்முகத்தேர்வு -இந்த அறிய வாய்ப்பை சமுதாய இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சித்திறன்,  இதுகுறித்து மாவட்ட கலக்டர் மனோகரன் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
புதுக்கோட்டை  மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது .இதற்காக வருகின்ற 20 தேதிமுதல் நேர்முகத்தேர்வு நடைபெறவுள்ளது  இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊராகப்பகுதியில் உள்ள வேலைவாய்ப்பற்ற 18 முதல் 35 வயது வரையுள்ள எஸ்.எஸ்.எல்.ஸி தேறிய/தவறிய அதற்கு மேலும் கல்வித்தகுதி உடைய இளைஞர்கள்,இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு உத்திரவாதத்துடன் கூடிய தொழிர்த்திரன் பயிற்சி தகுதிவாய்ந்த பயிற்சி நிறுவனங்களும் மற்றும் பயிற்ச்சிகளை பெறவிரும்பும் இளைஞர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்முகத்தேர்வு 
இதில் திருமயம் மற்றும் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு வருகின்ற 20ம் (வியாழக்கிழமை )தேதி திருமயம் ஊராட்சி ஒன்றிய அழுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறுகிறது.

அறந்தாங்கி,மணமேல்குடி ஆவிடையார் கோவில் ஒன்றியங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு வருகின்ற 21ம் தேதி வெள்ளிகிழமை அறந்தாங்கி ஒன்றிய அழுவலகத்தில் நேர்முகத்தேர்வு நடைபெறுகின்றது ,திருவரங்குளம் கரம்பக்குடியை ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு 24ம் தேதி திங்கட்கிழமை ஆலங்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேர்முகத்தேர்வு நடைபெற வுள்ளது.அன்னவாசல்,விராலிமலை ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு வருகின்ற 25ம் தேதி செவ்வாய்கிழமை அன்னவாசல் ஒன்றிய அழுவலகத்திலும்,கந்தர்வகோட்டை,குண்டார்கோவில் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு 26ம் தேதி புதன்கிழமை கந்தர்வகோட்டை ஒன்றிய அழுவலகத்திலும் ,புதுக்கோட்டை அரிமளம் ஒன்றியங்களை சேர்ந்தவர்களுக்கு,மற்றும் மற்ற ஒன்றியங்களில் கலந்து கொள்ளாமல் விடுபட்டவர்களுக்கு 27ம் தேதி வியாழக்கிழமை புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்க அழுவலகத்திலும் நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.இந்த அறிய வாய்ப்பை சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள்  பயன்படுத்தி பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கேட்டுக்கொள்கிறது.





 

No comments: