22.9.10

கொலையாளியை கண்டுபிடிக்காத காவல்துறையின் மெத்தனப் போக்கை கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்!

படுகொலை  செய்யப்பட்ட மாணவன்  சாகுல் ஹமீது   



           பேரணியில் கலந்து கொண்டஏராளமான  ஆண்களும் பெண்களும்

கலெக்டர் சுகந்தி அவர்களிடம் மனு கொடுக்கும் போது

பேச்சாளர் முஜாஹித் அவர்கள் நிரூபர்களிடம் பேட்டி அளித்த போது 

கலெக்டரிடம் அளிக்கபட்ட மனு-1

கலெக்டரிடம் அளிக்கபட்ட மனு-2


புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை சேர்ந்த அப்துல் ஹமீது மகன் சாகுல் ஹமீது தனியார் பொறியியல் கல்லூரியில் 2 ம் ஆண்டு படுத்தி வந்த மாணவனை படுகொலை செய்த கொலையாளிகளை கண்டுபிடிக்க தவறிய காவல்  துறையை கண்டித்தும் சி .பி.ஐ விசாரணை கோரியும்,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு  உரிய நஷ்ட ஈடு வழங்க கோரியும், புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 க்கும் மேற்ப்பட்ட ஆண்கள் பெண்கள் மாணவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட ஆட்சி தலைவர் சுகந்தி IAS அவர்களை சந்தித்து மனு கொடுத்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட  தலைவர் நூர் முகம்மது தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் சுல்தான் அவர்கள் முன்னிலை வகித்தார். மாவட்ட மாணவரணி செயலாளர் சேக் தாவூத் ஒலி ஊர்வலத்தை துவங்கி வைத்தார்.பேச்சாளர் முஜாஹித்  அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட நிர்வாகிகளும் .கிளை நிர்வாகிகளும்,பொது மக்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

No comments: