5.6.15

இலவச நூல்கள் வழங்கி பிறமத அழைப்பு பணி - 1-5 முதல் 30-5-15 வரை - புதுகை நகர் கிளை - 1

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புதுக்கோட்டை மாவட்ட தலைநகரில் நடைபெற்ற பொருட்காட்சியில் மாபெரும் பிறமத அழைப்பு பணி 6/5/2015 முதல் 30/5/15 வரை தொடர்ந்து 25 நாட்கள் நடைபெற்றது. அதில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மது, விபச்சாரம், வரதட்சனை, சிசு கொலை போன்ற பல பிளக்ஸ் 10 இடங்களில் வைக்கப்பட்டது, இலவசமாக 3472 மார்க்க விளக்க நூல்களும், 40,000 துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இந்நிகழ்சியில் 120 அல்குர்ஆன் தமிழ் தர்ஜுமாவும், 800 க்கும் அதிகமான முஸ்லிம்கள் தீவிரவாதிகள்? என்ற நூலும் அடங்கும். இன்னும் 20 க்கும் அதிகமான நபர்கள் தங்களுக்கு அல்குர்ஆன் தமிழ் தர்ஜுமா அனுப்பித்தருமாறு முகவரியை கொடுத்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கும் தலிமையிடம் பெற்று அனுப்பிவைப்போம்.

இப்பணி மாவட்ட நிர்வாகிகள் மேற்பார்வையில் புதுக்கோட்டை கிளை 1, 2 உறுப்பினர்களை கொண்டு நடைபெற்றது.  



No comments: