Showing posts with label பத்திரிகை செய்திகள். Show all posts
Showing posts with label பத்திரிகை செய்திகள். Show all posts

2.2.15

புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு-பத்திரிக்கை செய்தி

                          இறைவனின் திருப்பெயரால்...



புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு 01.02.2015 அன்று அறந்தாங்கி TNTJ மர்கஸில் நடை பெற்றது அது குறித்து ஹிந்து மற்றும் தினகரன் நாளிதழில் வெளியான பத்திரிக்கை செய்திகள் மற்றும் தீர்மானம் 





தீர்மானம்1
சமூக வலைதளங்களில் கருத்துச் சுதந்திரம் என்கிற போர்வையில் அநாகரீகமாகவும், அறுவறுக்கத்தக்க   வகையிலும்,மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும் கருத்திடுவோரை  கண்டறிந்து அவர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் இச்செயற்குழு  கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்2
 நாட்டின் உணவு உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கின்ற விவசாய விளை நிலங்களை ரியல் எஸ்டேட் என்கிற பெயரில் பிளாட் போட்டு விற்பதை குற்றம் என்று அறிவிக்க  உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டுமாய் மத்திய  மாநில அரசுகளை இச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்3
எந்த நாடு வேளான்மை  உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறதோ அந்த நாடே எதிகாலத்தில் வல்லரசு நாடாக கருதப்படும் எனவே வேளாண்மை சார்ந்த துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து,வேளாண்மை துறையில்  நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றங்களை கையாண்டு அழிந்து வரும் விவசாய தொழிலை பாதுகாக்க தகுந்த முன்னேற்பாடுகளை செய்ய வேண்டுமாய் இச்செயற்குழு மூலம் மத்திய  மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறோம்

தீர்மானம்4
மது என்கிற அரக்கனுக்கு உழைக்கும் மக்களயும்  ,மாணவர்களயும்  அடிமையாக்கி தமிழகத்தை   போதையில் தத்தளிக்க வைத்திருப்பது  வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது 
மதுவினால் இலட்சக்கணக்கான பெண்கள் கணவனை இழந்து விதவைகளாகவும்,அனாதைச் சிறுவர்கள் அதிகம் நிறைந்த மாநிலமாகவும்  தமிழகம் திகழ்கிறது,இப்படி பல உயிர்களை கொன்று பெண்களை விதவைகளாக்கி,சிறுவர்களை அனாதைகளாக்கி கிடைக்கும் டாஸ்மாக் வருமானத்தின் மூலம் அரசுநிர்வாகத்தை நடத்த வேண்டுமாஎன்பதை தமிழக அரசு மனசாட்சியுடன் சிந்தித்து மதுவை தடை செய்து தமிழகத்தை பூரண மது விலக்கு பெற்ற மாநிலமாக அறிவிக்க வேண்டுமாய் இச்செயற்குழு தமிழக அரசை வழியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்5
196 கிராமங்கள் மற்றும் 28 ஊராட்சிகளை கொண்ட மணமேல்குடி தாலுகாவில்,பலகோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட அரசுமருத்துவமனை மக்கள் தொகைக்கு ஏற்ப போதிய மருத்துவர்களும்,செவிலியர்களும் இல்லாமல் செயலிழந்து காணப்படுகிறது.போர்கால அடிப்படையில் இந்த மருத்துவமனையை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமாய்  தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தமிழக அரசு இந்த விசயத்தில் தொடர்ந்து மெத்தனம் காட்டினால் 196 கிராம மக்களையும் ஓன்று திரட்டி மருத்துவ மனையை இழுத்து மூடும் போராட்டத்தை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தும் என்றும் இச்செயற்குழு எச்சரிக்கின்றது

தீர்மானம்6
ஆர்.புதுப்பட்டினத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்த 21 குடும்பங்களை சமூக புறக்கணிப்பு செய்து ஊர்நீக்கம் செய்துள்ள உள்ளூர் ஜமாஅத் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அந்த மக்கள் தங்கள் சொந்த ஊரில் சம உரிமையுடனும், பாதுகாப்புடனும் வாழ வழி செய்ய வேண்டுமாய் தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் இச்செயற்குழு வழியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம்7
அறந்தாங்கியில் அனைத்து முக்கிய சாலைகளும் புதிய சாலை அமைப்பதற்காக  JCB இயந்திரத்தின் மூலம் உடைக்கப்பட்டு  ஒருவார காலமாக அறளை  ஜல்லி கற்களாக காட்சியளிக்கின்றது சாலைப்பணிகளை மெத்தனமாக மேற்கொள்ளும் அறந்தாங்கி நகராட்சியை  இச்செயற்குழு வன்மையாக கண்டிகிறது துரிதகதியில் சாலைப்பணியை மேற்கொள்ளுமாறு அறந்தாங்கி நகராட்சியை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

                                                                                                              
 




                                                                                                                       

21.1.15

கிளை பொதுக்குழு-ஆர்.புதுப்பட்டினம்




ஆர்.புதுப்பட்டினம் கிளை பொதுக்குழு மாவட்ட தலைவர் அப்துல் குதுஸ் மற்றும் மருத்துவரணி செயலாளர் சித்திக் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் 18.01.2015 அன்று மாலை 4.30 மணிக்கு ஆர்.புதுப்பட்டினம் கிளை மர்கஸில் நடைபெற்றது இதில் கீழ்க்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர் 
தலைவர்:முஹம்மது சுலைமான்(9965643318)
செயலாளர்:இன்சமாம் உல் ஹக்(9944365037)
பொருளாளர்:அலி முஹம்மது(9790490118)
து.தலைவர்:நூர்முஹம்மத்(9865993385)
து.செயலாளர்:(9750247620)
மாணவரணி செயலாளர்:ஷேய்க்அப்துல்லாஹ்(9629157819)
மருத்துவரணி செயலாளர்:செய்து அபுதாகிர்(9698547801)

5.1.15

பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதுக்கோட்டை நகரக்கிளை 2 -02.01.2015








புதுக்கோட்டை நகரக்கிளை 2ன் சார்பாக 02.01.2015 அன்று நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மார்க்க விளக்கப்பொதுக்கூட்டம் நடை பெற்றது இதில் மாநிலப்பொதுச் செயலாளர் சகோ.கோவை ரஹ்மத்துல்லாஹ் மற்றும் மாநில செயலாளர் அச்ரப்தீன் பிர்தவ்ஸி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
இதில் ஒரு சகோதரருக்கு ரூபாய் 60000 (அறுபதாயிரம் மதிப்பில் )டிபான் விற்பனை செய்யும் தள்ளுவண்டி

8 ஏழை சகோதரிகளுக்கு தையல் மிஷின் மதிப்பு 47200

14 நபர்களுக்கு 10கிலோ அரிசிபை  (மதிப்பு 4270)வழங்கப்பட்டது 
வழங்கப்பட்ட நலத்திட உதவியின் மொத்தமதிப்பு 111470 ஒரு லட்சத்தி பதினோரயிரத்தி நானூற்றி எழுபது ரூபாய்கள் அல்ஹம்துலில்லாஹ்.

31.12.14

மாவட்ட பொதுக்குழு பத்திரிக்கை செய்தி


புதுக்கோட்டை மாவட்டத்தின் 9வது பொதுக்குழு புதுக்கோட்டை ஐஸ்வர்யா மகாலில் நடை பெற்றது அது குறித்த தினகரன் பத்திரிகை செய்தி 

16.12.14

அறந்தாங்கி -தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் இரத்த தான முகாம்







அறந்தாங்கி  கிளை சார்பில் 14/12/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹூத் அழைப்பை ஏற்று அறந்தாங்கி நகர கோட்டாட்சியர்(R.D.O) ‪#‎சாந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு #தவ்ஹூத் ஜமாஅத்தின் இரத்த தானத்தின் சிறப்பை பற்றி பாரட்டி உரை நிகழ்த்தினார்கள்,கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதலாவது நபராக இரத்த தானம் செய்து துவங்கி வைத்தார்கள்,போக்குவரத்து உதவி ஆய்வாளர் S.I ‪#‎குமார்‬அவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்,சகோதரர் முஜாஹித்(மாவட்ட பேச்சாளர்) சிறப்பாரையாற்றினார்கள் , மாவட்ட நிர்வாகிகள் ‪#‎குலாம்‬ மற்றும் ‪#‎ஹில்ரு‬ முஹம்மது இரத்ததான முகாமில் கலந்து கொண்டார்கள், இரத்ததானம் செய்ய காவல்துறை அதிகரிகள் ,மாற்றுமத சகோதர,சகோதரிகள் மற்றும் நம் சகோதரர்கள் என மொத்தம் 44 நபர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள், இது அரசு ‪#‎மருத்துவமனை‬ விருப்பத்திற்காக நடத்தப்பட்ட அவசர இரத்த தான முகாம் ஆகும் , அல்ஹம்துலில்லாஹ், புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

21.11.14

புதுக்கோட்டை மாவட்டம் மனித சங்கிலி - பத்திரிகை செய்தி















புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தின் இறுதியாக மனித சங்கிலி  நடைபெற்றது. பத்திரிகைகளில் வெளியான செய்தி.
                                                          






21.8.14

புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக ஆர்ப்பாட்டம் - பத்திரிகை செய்தி



புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக இஸ்ரலை கண்டித்து கடந்த 09.08.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அது தொடர்பாக பத்திரிகையில் வெளியான செய்தி.

15.8.14

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் - பத்திரிக்கை செய்தி 09.08.2014



இஸ்ரேலின் இனஅழிப்பைக் கண்டித்தும்,இந்தியாவில் வாழும் இருபது கோடி முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் 09.08.2014 அன்று மாலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக தினமணி பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி.
         

2.8.14

புதுக்கோட்டை நகரம் கிளை - பித்ரா பத்திரிக்கை செய்தி 28.07.2014




புதுக்கோட்டை நகரம் கிளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது.இது தொடர்பாக  தினகரன் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

17.4.14

மழைத்தொழுகை - பத்திரிகை செய்தி -புதுக்கோட்டை நகரம்


13-4-14 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை நகர கிளை சார்பாக நடத்தப்பட்ட மழை தொழுகை சம்பந்தமான செய்தி மறுநாள் 14-4-14 அன்று தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

18.2.14

"சாதித்து காட்டுவோம்" -கல்வி கருத்தரங்கு 16.02.2014-புதுக்கோட்டை மாவட்டம்
























புதுக்கோட்டை மாவட்டம் ,வடக்கு அம்மாபட்டினம்,அம்மாபட்டினம் கோட்டைபட்டினம் ,ஜெகதாபட்டினம் ,கோபாலபட்டினம் ,ஆர் புதுபட்டினம் ஆகிய கிளைளின் சார்பாக "சாதித்து காட்டுவோம்" என்ற  பிரம்மாண்ட கல்வி கருத்தரங்கு நடைபெற்றது.

10th ,+12 மாணவ மாணவியர்காக நடைபெற்ற இந்த பொது தேர்வு பயிற்சி முகாமில் 70%சதவிதம் முஸ்லிம் அல்லாத மாணவ மாணவிகள் உள்பட 900இக்கும் மேற்பட்ட  மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் நிகழ்சியில் மாணவ மாணவிகளுக்கு சாதித்து காட்டுவோம் என்ற தலைப்பில் கை ஏடு புக் 1000 வழங்கப்பட்டது அதன் மதிப்பு 4=1000-4000 ஆகும்.


அல்ஹம்துலில்லாஹ்  

12.2.14

ரெத்தினக்கோட்டை -பத்திரிக்கை செய்தி 11.02.2014









ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக மாவட்ட துணை தலைவர் சகோ.மக்தூம் அவர்களுடைய தலைமையில் ஊர் நீக்கம் சம்பந்தமாக மனு அளிக்கப்பட்டது.அது தொடர்பாக பத்திரிக்கைகளில் வெளியான செய்தி 
   






26.1.14

மேற்பணைக்காடு கிளை - பத்திரிகை செய்தி


மேற்பணைக்காடு கிளை சார்பாக 23.01.2014 அன்று துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.அது தொடர்பாக 24.01.2014 அன்று தினகரன் பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது.

22.1.14

பத்திரிக்கை செய்திகள்

புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கியில் நடைபெற்ற வாகன பேரணி குறித்து பத்திரிகையில் வெளியான செய்தி.




29.12.13

செயல் வீரர்கள் கூட்டம் - பத்திரிக்கை செய்தி


புதுக்கோட்டை TNTJ சார்பாக நடை பெற்ற செயல் வீரர்கள் கூட்டம் சம்பந்தம்மாக தினகரன் பத்திரிக்கையில் வெளியான செய்தி.

15.12.13

மணமேல்குடி பொதுக்கூட்டம் - பத்திரிக்கை செய்திகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் மணமேல்குடி கிளை சார்பாக 30.11.2013 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டம் சம்பந்தமாக தினசரி பத்திரிக்கைகளில் வெளியான செய்திகள் .




4.12.13

மணமேல்குடி பொதுக்கூட்டம் பத்திரிக்கை செய்தி 02.12.2013





தினமணியில் வெளியான செய்தி













தினகரனில் வெளியான செய்தி





புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் சம்பந்தமாக தினசரி நாழிதல்களான தினகரன் மற்றும் தினமணியில் வெளியான செய்தி.



23.11.13

புதுக்கோட்டை மாவட்டம் - ஜனவரி 28 பத்திரிக்கை செய்தி ..... 18.11.2013




புதுக்கோட்டை மாவட்ட பொதுக்குழுவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது .இதில் மாநில செயலாளர் சகோ.அப்துல் ரஹீம் அவர்கள் ஜனவரி 28 போராட்டம் ஏன் என்று கேள்விக்கு விரிவாக பேட்டி அளித்தார்.

1.2.13

பத்திரிகை செய்தி


புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக 1.2.13 அன்று விஸ்வரூபம் திரைப்படத்தை முழுமையாக தடைசெய்ய வலியுறுத்தி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. இது சம்பந்தமாக தினசரி நாளிதழ்களான  தினத்தந்தி மற்றும் தினகரன்-னில் புகைப்படத்துடன் கூடிய செய்தி வெளியிடப்பட்டது.