16.12.14

அறந்தாங்கி -தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் இரத்த தான முகாம்







அறந்தாங்கி  கிளை சார்பில் 14/12/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹூத் அழைப்பை ஏற்று அறந்தாங்கி நகர கோட்டாட்சியர்(R.D.O) ‪#‎சாந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு #தவ்ஹூத் ஜமாஅத்தின் இரத்த தானத்தின் சிறப்பை பற்றி பாரட்டி உரை நிகழ்த்தினார்கள்,கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதலாவது நபராக இரத்த தானம் செய்து துவங்கி வைத்தார்கள்,போக்குவரத்து உதவி ஆய்வாளர் S.I ‪#‎குமார்‬அவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்,சகோதரர் முஜாஹித்(மாவட்ட பேச்சாளர்) சிறப்பாரையாற்றினார்கள் , மாவட்ட நிர்வாகிகள் ‪#‎குலாம்‬ மற்றும் ‪#‎ஹில்ரு‬ முஹம்மது இரத்ததான முகாமில் கலந்து கொண்டார்கள், இரத்ததானம் செய்ய காவல்துறை அதிகரிகள் ,மாற்றுமத சகோதர,சகோதரிகள் மற்றும் நம் சகோதரர்கள் என மொத்தம் 44 நபர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள், இது அரசு ‪#‎மருத்துவமனை‬ விருப்பத்திற்காக நடத்தப்பட்ட அவசர இரத்த தான முகாம் ஆகும் , அல்ஹம்துலில்லாஹ், புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

No comments: