Showing posts with label மனிதநேயபணி. Show all posts
Showing posts with label மனிதநேயபணி. Show all posts

26.1.15

இலவச மருத்துவ முகாம்-ஆலங்குடி கிளை


ஆலங்குடி கிளையில் 25.01.2015 அன்று இரத்தஅழுத்தம்,சர்க்கரை கண்டறிதல் மற்றும் பொது மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் தேவையானவர்களுக்கு மருந்து மாத்திரைகளும் தேவையானவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டது  இதில் 125 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் அல்ஹம்துலில்லாஹ் 

16.12.14

அறந்தாங்கி -தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் இரத்த தான முகாம்







அறந்தாங்கி  கிளை சார்பில் 14/12/2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிரான மாபெரும் இரத்த தான முகாம் நடைபெற்றது.தமிழ்நாடு தவ்ஹூத் அழைப்பை ஏற்று அறந்தாங்கி நகர கோட்டாட்சியர்(R.D.O) ‪#‎சாந்தி அவர்கள் கலந்து கொண்டு தமிழ்நாடு #தவ்ஹூத் ஜமாஅத்தின் இரத்த தானத்தின் சிறப்பை பற்றி பாரட்டி உரை நிகழ்த்தினார்கள்,கலந்து கொண்டதோடு மட்டுமில்லாமல் முதலாவது நபராக இரத்த தானம் செய்து துவங்கி வைத்தார்கள்,போக்குவரத்து உதவி ஆய்வாளர் S.I ‪#‎குமார்‬அவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள்,சகோதரர் முஜாஹித்(மாவட்ட பேச்சாளர்) சிறப்பாரையாற்றினார்கள் , மாவட்ட நிர்வாகிகள் ‪#‎குலாம்‬ மற்றும் ‪#‎ஹில்ரு‬ முஹம்மது இரத்ததான முகாமில் கலந்து கொண்டார்கள், இரத்ததானம் செய்ய காவல்துறை அதிகரிகள் ,மாற்றுமத சகோதர,சகோதரிகள் மற்றும் நம் சகோதரர்கள் என மொத்தம் 44 நபர்கள் கலந்து கொண்டனர்.மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள், இது அரசு ‪#‎மருத்துவமனை‬ விருப்பத்திற்காக நடத்தப்பட்ட அவசர இரத்த தான முகாம் ஆகும் , அல்ஹம்துலில்லாஹ், புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே

4.12.14

மருத்துவ உதவி புதுக்கோட்டை நகரக்கிளை1-01.12.2014


புதுக்கோட்டை நகரக்கிளை1ன் சார்பாக ஒரு சகோதரருக்கு மருத்துவ உதவியாக ருபாய் 2000 வழங்கப்பட்டது 

23.10.14

சமூகப்பணி R.புதுப்பட்டினம்-21.10.2014






R.புதுப்பட்டினம் கிளை சார்பில் 21.10.2014 அன்று பொதுமக்களுக்கு இடையூராக இருந்த கருவை மரங்கள் அகற்றபட்டது அல்ஹம்துலில்லாஹ்

2.6.14

இலவச கத்னா முகாம் புதுக்கோட்டை நகரகிளை 1-20.05.2014


20-5-14 அன்று புதுக்கோட்டை நகரகிளை 1 சார்பாக 14 ஏழை சிறுவர்களுக்கு ரூபாய் 11000 செலவில்  இலவச கத்னா செய்யப்பட்டது இதில் மருத்துவ கட்டணம் மருந்து மாத்திரை ஊசி கைலி உட்பட அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது

14.4.14

இரத்ததான முகாம் கீரமங்கலம் கிளை-05.04.2014



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிளையின் சார்பாக கடந்த 05.04.2014 அன்று அறந்தாங்கி அறிஞர் அண்ணா அரசுமருத்துவ மனையுடன் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது இதில் 32 நபர்கள் குருதி கொடையளித்தனர் அல்ஹம்துலில்லாஹ்

14.3.14

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் - மருத்துவ உதவி 12.03.2014



புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக இரு சிறுநீரகமும் செயல் இழந்த சகோதரிக்கு டயாலிஸ் செய்வதற்காக ரூபாய் 13,200 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

13.1.14

புகையிலையால் ஏற்படும் கேடு விழிப்புணர்வு பேனர்-ஆலங்குடி கிளை

ஆலங்குடி கிளையின் சார்பாக புகையிலையால் ஏற்படும் கேடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 1*1 அளவில் 50 பேனர்கள் அடித்து அனைத்து கடைகளிலும் 05.01.2014 அன்று வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.





19.12.13

மனிதநேயப் பணி முக்கணாமலைப்பட்டி கிளை 17.12.2013













 முக்கண்ணாமலைப் பட்டிகிளையில்   17.12.2013 அன்று குடும்ப அட்டை புதுப்பித்தல் முகாம் நடைபெற்றது. இதில் பணம் வாங்கிகொண்டு சிலர் விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்தனர். நம் கிளை சகோதரர்கள் இலவசமாக விண்ணப்பம்  பூர்த்தி செய்து கொடுத்தனர். இதில் 700 க்கும் அதிகமான மக்கள் பயன் அடைந்தனர். அல்ஹம்து லில்லாஹ்!!!! 

   

20.10.12

அரசர்குளம் கிளையில் கொசு மருந்து தெளிக்கும் மிஷின் வழங்கப்பட்டது

அரசர்குளம் கிளையில் 19.10.12 அன்று அரசர் குளம்  பஞ்சயத் போர்டிற்கு ரூபாய் 45000 நாற்பத்தி ஐந்தாயிரம் மதிப்புள்ள கொசு மருந்து தெளிக்கும் மிஷின் ஓன்று பஞ்சயத் தலைவி ராமிசா பேகம் அவர்களிடம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

21.4.12

அம்மாபட்டினம் கிளையில் தண்ணீர் பந்தல்

19.4.2012 அன்று புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் கிளையில் வெயிலின் காரணமாக அவதிப்படும் மக்களுக்கு அவர்களின் தாகம் தீர்ப்பதற்காக நமது இஸ்லாமிய நூலகத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது .

16.4.12

முக்கனாமலைப்பட்டி-ஆம்புலன்ஸ் அற்பணிப்பு & பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் உதவியால் புதுக்கோட்டை மாவட்டம் முக்கனாமலைப்பட்டி  கிளையில்14.4.2012 சனிகிழமை சுன்னத் ஜமாத்தின் பல்வேறு தீவிரமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆம்புலன்ஸ் அற்பணிப்பு & பொதுக்கூட்டம் இனிதே நடைபெட்ட்றது . அல்ஹம்துலில்லாஹ் .....
 இப் பொதுக்கூட்டத்தை எப்படியும் தடுத்தே ஆகவேண்டும் என்பதில்....

23.11.10

கோட்டைபட்டிணத்தில் இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் கடந்த 11-11-2010 அன்று இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 146 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.