7.6.15

பகுதி வரியாக செயல்வீரர்கள் கூட்டம் -

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் புதுக்கோட்டை மாவட்டம் தோறும் பகுதிவாரியாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் கிழக்குப்பகுதியான அம்மாபட்டினம், வடக்கு அம்மாபட்டினம், கிருஷ்ணஜிப்பட்டினம், கோபாலபட்டினம், ஆர். புதுப்பட்டினம் கிளைகள் அடங்கிய கூட்டம் கோட்டைப்பட்டினம் மர்கசில் 06/06/15 அன்று இரவு 9 மணிக்கு மாவட்ட செயலாளர் குலாம் பாஷா துணை செயலாளர் சித்திக் ரஹ்மான் தலைமையிலும், 

அறந்தாங்கி சுற்றுப்பகுதிகளான  ரெத்தினக்கொட்டை, அரசர்குளம், கீரமங்கலம், காசிம்புதுபேட்டை , மேற்பனைக்காடு கிளைகள் அடங்கிய கூட்டம் 06/06/15 அன்று 7 மணிக்கு அறந்தாங்கி மர்கசில் துணை செயலாளர் முஹம்மது சாதிக் தலைமையிலும், 

ஆலங்குடி, கறம்பக்குடி, மலவராயன்பட்டி, அன்னவாசல், முக்கனாமலைப்பட்டி, புதுக்கோட்டை -2 கிளைகள் புதுக்கோட்டை மார்கஸ் 1 ல் 07/6/15 அன்று காலை 7 மணிக்கு தலைவர் பாருக், பொருளாளர் ஹில்ர் முஹம்மது, துணை தலைவர் அப்துல்பாஷித், துணை செயலாளர் இக்பால் ஆகியோர் தலைமையிலும் கூடி மதுரையில் வரும் 9ம் தேதி நடக்க இருக்கும் கண்டன ஆற்பட்டத்திற்கு பெருவாரியான மக்களை அழைத்து செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட கிளை நிர்வாகிகள் அதற்காக முயற்சி எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். 

மேலும் அழைப்புபனிகளை வீரியமாக செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. 

No comments: