26.9.10

ரியாத் – புதுக்கோட்டை மாவட்ட TNTJ சகோதரர்கள் கூட்டம்!!




கடந்த 23 -09 -2010 வியாழன் அன்று புதுக்கோட்டை மாவட்ட TNTJ கூட்டமைப்பின் மூன்றாவது கூட்டம், ரியாதில், ரியாத் TNTJ மர்கஸில் நடைபெற்றது. ரியாத்...

மண்டல துணைச் செயலாளரும், மண்டல பேச்சாளருமான சகோ. மௌலவி சாதிக்கீன் அவர்கள் தொழுகையின் முக்கியத்துவம் பற்றியும், நம் தொழுகை எவ்வாறு அமமய வேண்டும் மற்றும் பெருமானார் (ஸல்) தனது இறுதி மூச்சு வரை தொழுகையை கடை பிடித்தது பற்றியும் விரிவாக உரை நிகழ்த்தினார்.
அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் இருந்து கிடைத்த அழைப்பு பணி குறித்த தகவல்கள் உறுப்பினர்களிடம் விளக்கி கூறப்பட்டது. மழையினால் தேங்கி நிற்கும் தெருமுனைப் பிரச்சாரத்தையும், பெண்கள் பயானையும் மாவட்டம் முழுவதும் விரைவில் நடத்த வலியுறுத்தப்பட்டது .
தொடர்ந்து உறுப்பினர்கள் ஆலோசனை நேரத்தில் மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது

No comments: