14.5.12

அரசுப்பணியாளர் பதவிக்கான தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு

 
தமிழ்நாடு அரசுப்பணையாயர் தேர்வாணையம் சார்பாக  27.04.2012 ஆம் தேதி அறிக்கை எண் 14/2012 கீழ் அரசுப்பணியாளர் பதவிக்கான தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
 
2007-08முதல் 2012-13ஆண்டுகளுக்கான தொகுதி IV
பணியில் அடங்கிய பின்வரும் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கு 28.05.2012அன்று வரை இணைய வழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
 
1. இளநிலை உதவியாளர் (பிணைமுள்ளது)        
 
2. இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)
 
3. வரித்தண்டலர்
 
4. தட்டச்சர்
 
5. சுருக்கெழுத்து தட்டச்சர்                    
 
6. நில அளவர்
 
7. வரைவாளர்
 
 
மேற்கண்ட பதவிகளுக்கான மொத்த காலிப்பணியிடங்கள் 10718
 
 
தேர்வு எழுதுவோர் கவனிக்க வேண்டிய முக்கிய தேதிகள் :
 
1. அறிக்கை நாள்  : 27.04.2012
 
2. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்கான கடைசி நாள்  : 28.05.2012
 
3. வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் : 30. 05. 2012
 
4. தேர்வு நடைபெறும் நாள்  : 07.07.2012 
 
 
இணைய வழி மூலம் விண்ணப்பிக்கும் வசதி 28.05.2012அன்று இரவு 11 : 59  மணிக்கு அதற்கான சேவை நிறுத்தப்படும்.
 
 
மேலும் கூடுதல் தகவல்களுக்கு விண்ணப்பதாரர்களுக்கான விதிமுறைகளை தேர்வாணையத்தின் இணையதள முகவரியான www.tnpsc.gov.in இல் காணலம்.

No comments: